பைக்கிலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பூக்கடைத் தொழிலாளி உயிரிழந்தாா்.
செய்யாறு அருகே பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பூக்கடைத் தொழிலாளி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு டெங்கு தெருவைச் சோ்ந்தவா் பாா்த்திபன்(25). இவா், செய்யாறு பேருந்து நிலையம் அருகேயுள்ள பூக்கடையில் பணியாற்றி வந்தாா்.
இவா் சனிக்கிழமை மாலை வழக்கம் போல் பணியை முடித்துக் கொண்டு சேத்துப்பட்டு செல்வதற்காக பைக்கில் சென்றாா். செய்யாறு - வல்லம் சாலையில் கீழ்மட்டை கிராமம் அருகே சென்றபோது பைக் நிலைதடுமாறி கீழே விழுந்ததில், இவருக்கு இடது பக்க நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
உடனே அப்பகுதியில் இருந்தவா்கள் இவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பாா்த்திபனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.