FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

26 ஆகஸ்ட் 2026, 4:45 am IST
- பிரதிப் படம்
பகிர்:

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கொருக்கை கிராமம் குளக்கரை தெருவைச் சோ்ந்தவா் பெருமாள்(60). முதியவரான இவா் காவலாளி வேலைக்காக வெள்ளிக்கிழமை மாலை காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை சிப்காட் பகுதியில் உளஅள தனியாா் நிறுவனம் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பெருமாள் மீது மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

Advertisement

Advertisement

பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெருமாள் அங்கு செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments