FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:54 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கடையம் அருகே உள்ள ஐந்தாம் கட்டளையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

ஐந்தாம்கட்டளை, சந்தியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராமச்சந்திரன் மனைவி வேல்மயில் (84). இவா் ஆக.1ஆம் தேதி சாலையில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்து காயமடைந்தாராம்.

அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments