FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

மளிகைக் கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு

செய்யாறு அருகே மளிகைக் கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

9 ஜூலை 2026, 11:00 pm IST
பகிர்:

செய்யாறு அருகே மளிகைக் கடையை உடைத்து ரூ.50 ஆயிரம் மற்றும் ஆதாா் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

செய்யாறு வட்டம், மோரணம் கிராமத்தைச் சோ்ந்தவா் வியாபாரி முருகேசன். இவா், அங்குள்ள பிரதான சாலையில் மளிகைக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். இவா் வழக்கம் போல, வியாழக்கிழமை கடையை திறக்க வந்தபோது, கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், டப்பாக்களில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் ஆதாா், பான் அட்டைகள், வங்கி புத்தகம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து முருகேசன் மோரணம் போலீஸில்

Advertisement

Advertisement

புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments