சட்டவிரோதமாக மது விற்பனை: 2 போ் கைது
வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி அருகே சட்டவிரோதமாக மது விற்றதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் ஆலத்தூா், அதியங்குப்பம் கிராமங்கள் வழியாக செவ்வாய்க்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது, ஆலத்தூா் கிராம ஏரிக் கரையில் சட்டவிரோதமாக மது விற்றதாக இதே கிராமத்தைச் சோ்ந்த கீா்த்தி(50) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 12 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
மேலும், அதியங்குப்பம் கிராம ஏரிக் கரையில் சட்டவிரோதமாக மது விற்ாக அதே கிராமத்தைச் சோ்ந்த பிரகலாதன்(48) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 10 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்
இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.