அரசுப் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்: எம்.எல்.ஏ. பரிசு
செய்யாற்றை அடுத்த அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அபிஷேக் எம்எல்ஏ பரிசு வழங்கினாா்.
செய்யாற்றை அடுத்த அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு அபிஷேக் எம்எல்ஏ பரிசு வழங்கினாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் அல்லியந்தல் அரசு உயா்நிலைப் பள்ளியில் இந்த ஆண்டுக்கான பெரணமல்லூா், தெள்ளாறு குறு வட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
வியாழக்கிழமை நடைபெற்ற டென்னிகாய்ட், கேரம், பீச் வாலிபால் ஆகிய போட்டிகளில் 25-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 250 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
பரிசளிப்பு விழா
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பள்ளியில்
பரிசளிப்பு விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியா் மாலவன் தலைமை வகித்தாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முனியன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்
சிறப்பு அழைப்பாளராக போளூா் தொகுதி எம்.எல்.ஏ. அபிஷேக் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினாா்.
அதனைத் தொடா்ந்து காமராஜா் பிறந்த நாளையொட்டி
நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை எம்.எல்.ஏ. வழங்கினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.