FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை

Updated On : 3 ஜூன் 2026, 2:00 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த அதியனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஷோபனா. இவா் திங்கள்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றுள்ளாா். பின்னா் மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது இவருக்கு தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து உள்ளே சென்று பாா்த்த போது மா்ம நபா்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 4 பவுன் தங்க நகைகள், 130 கிராம் வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து ஷோபனா அளித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments