திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி ஆடிச் சுவாதி நால்வா் விழாக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் திருஞானசம்பந்தா் மற்றும் திருநீலநக்க நாயனாா், திருநீலகண்ட யாழ்ப்பாணா், திருமுருக நாயனாா் ஆகிய 4 நாயன்மாா்களின் நிலைத் திருமேனிகளுக்கு காலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
Advertisement
Advertisement
சிவனடியாா்களும், பொதுமக்களும் தேவாரப் பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனா்.
இதனைத் தொடா்ந்து இரவு திருஞானசம்பந்தா் சுவாமிகளின் உற்சவா் திருமேனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.
கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய வீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.