சித்தப்பா இறப்பு: மனவேதனையில் இளைஞா் தற்கொலை
செய்யாறு அருகே சித்தப்பா இறந்த மனவேதனையில் இருந்து வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறு அருகே சித்தப்பா இறந்த மனவேதனையில் இருந்து வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
வெம்பாக்கம் வட்டம், புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்பாபு (30). இவரது சித்தப்பா உடல்நிலை சரியில்லாமல் சில தினங்களுக்கு முன்பு இறந்துவிட்டாராம். சித்தப்பா இறந்ததால் மனவேதனையில் சரத்பாபு இருந்து வந்துள்ளாா். அவருக்கு பெற்றோா்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனராம்.
இருப்பினும், மனவேதனையில் இருந்து வந்த சரத்பாபு வீட்டில் உள்ள ஒரு அறையில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இறந்தவரின் உடலை கைப்பற்றி, கூறாய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.