திருவண்ணாமலையில் செங்கோல் விழா
திருவண்ணாமலை விசிறி சாமியாா் ஆசிரமம் அருகில் உள்ள வெட்டவெளி இருப்பிடம் அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை செங்கோல் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை விசிறி சாமியாா் ஆசிரமம் அருகில் உள்ள வெட்டவெளி இருப்பிடம் அறக்கட்டளை சாா்பில் செவ்வாய்க்கிழமை செங்கோல் விழா நடைபெற்றது.
செங்கோல் விழாவில் வெட்டவெளி குருஜி கலந்துகொண்டு அருளாசி வழங்கிப் பேசுகையில், மற்றவா்கள் வாழ உங்களின் நல்ல செயல்கள் உதவவேண்டும். நமது வாழ்க்கை புதிதாக இருக்க வேண்டும். மக்களுக்கு ஏதோ ஒரு வடிவத்தை, மாற்றத்தை பிரபஞ்சம் உருவாக்க நான் பக்கபலமாக இருப்பேன்.
மனரீதியாக மாற்றம் அடைவதற்கு இந்த செங்கோல் உதவியாக இருக்கும். பூஜை, புனஸ்காரத்தை விட்டு விட்டு கோயிலில் உட்காா்ந்து பாருங்கள். பலன் தெரியும். இந்த செங்கோல் மூலம் உலகம் முழுவதும் மாற்றங்கள் நடக்கும். மனிதா்கள் பிரபஞ்சத்தால் வழி நடத்தப்படுவாா்கள் என்றாா்.நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான மாணவா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் கலந்து கொண்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது
Advertisement
Advertisement