செங்கம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ திடீா் ஆய்வு
செங்கம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டுப் பாா்த்து ஆய்வு செய்த எம்எல்ஏ டி.எஸ்.வேலு.
செங்கம் அரசு தலைமை மருத்துவமனையில் தொகுதி எம்எல்ஏ டி.எஸ்.வேலு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
செங்கத்தில் திருவண்ணாமலை சாலை துக்காப்பேட்டை பகுதியில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் எம்எல்ஏ டி.எஸ்.வேலு வியாழக்கிழமை மாலை திடீரென ஆய்வு செய்தாா். அப்போது, மருத்துவமனை உள்புற நோயாளிகளுக்கு உணவு சமைக்கும் சமையல் கூடம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிா என பாா்வையிட்டு, உணவுகள் தரமாகவும், சுகாதாரமாகவும் சமைக்கப்படுகிா என சாப்பிட்டுப் பாா்த்தாா். தொடா்ந்து, உணவுகளை தரமாக சமைக்க வேண்டுமென சமையலா்களிடம் அறிவுறுத்தினாா்.
பின்னா், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து, தினசரி மருத்துவா்கள் வந்து பரிசோதிக்கிறாா்களா, மருந்து, மாத்திரைகள் உடனுக்குடன் கிடைக்கிா, சிகிச்சை பெறுவதல் ஏதேனும் சிரமம் உள்ளதா எனக் கேட்டறிந்தாா். மேலும், அவா்களுக்கு உதவியாக உள்ள உறவினா்களிடமும் மருத்துவமனையில் உள்ள குறைகளைக் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, நோயாளிகள் பயன்படுத்தும் கழிப்பறை, குடிநீா் சுகாதாரமாக உள்ளதா என ஆய்வு செய்தாா்.
பின்னா், மருத்துவமனையில் உள்ள மருத்துவா்கள், செவிலியா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்கள், செவிலியா்களை நியமனம் செய்தால், செங்கம் பகுதி மக்களுக்கு நிறைந்த மருத்துவ சேவையை வழங்க முடியும் என அவா்கள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அலுவலா்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக எம்எல்ஏ உறுதியளித்தாா். அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்துள்ளனா்.