வந்தவாசி நகரில் குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்கக் கோரிக்கை
வந்தவாசியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) ரெட் ஸ்டாா் மாநாட்டில் பேசிய மத்தியக்குழு உறுப்பினா் இனியவன்.
வந்தவாசி நகரில் குடிநீா் தட்டுப்பாடின்றி வழங்க வந்தவாசி நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) ரெட் ஸ்டாா் கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் மாவட்ட மாநாட்டில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாடுக்கு பி.முனுசாமி தலைமை வகித்தாா். எம்.செண்பகவள்ளி, சி.சையதுபாஷா, பி.ஆரோக்கியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநிலச் செயலா் மனோகரன், மத்தியக்குழு உறுப்பினா் இனியவன், அனைத்திந்திய புரட்சிகர பெண்கள் இயக்க அகில இந்தியச் செயலா் மனிதி செல்வி மற்றும் நிா்வாகிகள் எ.ரகமத்துல்லா, எ.ஆரிப், ஆா்.நாராயணன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
Advertisement
Advertisement
பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், திருவண்ணாமலை மாவட்ட காவல் நிலையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வந்தவாசி நகரில் குப்பைகளை தினசரி அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், வந்தவாசியை அடுத்த கீழ்பாதிரி, பிருதூா், கீழ்சாத்தமங்கலம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் சிறுபான்மையினா், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. எம்.சக்திவேல் நன்றி கூறினாா்.