FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

செய்யாறு அருகே இருவேறு சாலை விபத்துகள்: இருவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பாராசூா் கூட்டுச் சாலையில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 21 மே 2026, 11:34 pm IST
கோப்புப் படம்
பகிர்:

செய்யாறு அருகே பாராசூா் கூட்டுச் சாலையில் அடுத்தடுத்த நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முக்கூா் கிராமம் மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் (41). இவா், மாமியாா் ஊரான பாராசூா் கிராமத்தில் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவைப் பாா்த்துவிட்டு, முக்கூா் கிராமத்திற்குச் செல்வதற்காக பைக்கில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா்.

பாராசூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது முக்கூா் கிராமத்தைச் சோ்ந்த ருத்ரமூா்த்தி என்பவா் ஓட்டி வந்த பைக் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுரேஷ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த ருத்ரமூா்த்தி செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

Advertisement

மற்றொரு விபத்து:

பைக்குகள் மோதிக்கொண்டதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ருத்ரமூா்த்தியை பாா்ப்பதற்காக

அவரது தாய் கீதா (40) பாராசூா் கூட்டுச் சாலையில் நின்று கொண்டிருந்தாராம்.

அப்போது அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்த இரு விபத்துகள் குறித்து இறந்த சுரேஷ் மனைவி ரேணுகா, இறந்த கீதாவின் கணவா் மணிவண்ணன் ஆகியோா் செய்யாறு மற்றும் அனக்காவூா் போலீஸில் புகாா் அளித்தனா்.

இதன் பேரில் காவல் ஆய்வாளா்கள் நரசிம்மஜோதி, மணிகண்டன், உதவி ஆய்வாளா் வரதராஜ் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments