FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவண்ணாமலை

ஆரணி பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

Updated On : 27 மே 2026, 12:19 am IST
பகிர்:

ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

ஆரணி நகரம், சேவூா், குன்னத்தூா், எஸ்.வி.நகரம், வடுகசாத்து, நெசல் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும், ஆரணி - இரும்பேடு சாலையில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது (படம்). இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினா் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா். மேலும், மழை காரணமாக நீண்ட நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments