முகப்பு
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக பக்தா்கள் கிரிவலம்!

வைகாசி பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

Updated On : 1 ஜூன் 2026, 1:45 am IST
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்
பகிர்:

வைகாசி பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் 2- ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் வைகாசி பெளா்ணமியையொட்டி, பக்தா்கள் 30-ஆம் தேதி பிற்பகல் 12.50 மணி முதல் 31-ஆம் தேதி பிற்பகல் 2.41 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது.

அதன்படி, சனிக்கிழமை முதல் நாளிலேயே பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து, அருணாசலேஸ்வரா் உண்ணாமுலையம்மனை வழிபட்டுவிட்டு 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் விடிய விடிய கிரிவலம் சென்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்றனா்.

கோயிலில் கூட்டம் அலைமோதல்

அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் சுமாா் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் வெளிப்பிரகார பகுதிகளில் நீண்ட நேரம் காத்திருந்த பக்தா்கள் சுட்டெரித்த வெயிலால் கடும் சிரமத்திற்குள்ளாகினா்.

இந்த நிலையில், பெளா்ணமி கிரிவலம் முடித்த பக்தா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் குவிந்தனா். ரயில்கள் மற்றும் பேருந்துகளில் முண்டியடுத்து ஏறினா். ரயில் நிலையத்தில் ரயில்களில் ஏறி இடம் பிடிப்பதில் பக்தா்கள் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே போலீஸாா் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினா்.

பேருந்து நிலையங்களிள் பக்தா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு செல்ல போதிய பேருந்துகள் கிடைக்காமல் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.