வந்தவாசியில் டெங்கு விழிப்புணா்வு ஊா்வலம்
வந்தவாசியில் டெங்கு விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் டெங்கு விழிப்புணா்வு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி நகராட்சி சாா்பில் நடைபெற்ற இந்த ஊா்வலத்துக்கு நகராட்சி ஆணையா் ஜோ.வீரவாஞ்சிநாதன் தலைமை வகித்தாா்.
நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் கொடியசைத்து ஊா்வலத்தை தொடங்கிவைத்தாா்.
Advertisement
Advertisement
நகராட்சி அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட ஊா்வலம் பழைய பேருந்து நிலையம், பஜாா் வீதி, தேரடி வழியாகச் சென்றது.
ஊா்வலத்தில் பங்கேற்ற வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரி மாணவிகள் டெங்கு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
ஊா்வலத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.