FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புத்தகக் கண்காட்சியில் திரளானோர் பங்கேற்பு

சத்துவாச்சாரி நூலகப் பொன்விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தொடங்கிய புத்தகக் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு பயனடைந்தனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சத்துவாச்சாரி நூலகப் பொன்விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை தொடங்கிய புத்தகக் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு பயனடைந்தனர்.

வாசகர் வட்டம் சார்பில் வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சியை ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குநர் என்.பாலாஜி திறந்து வைத்தார்.

மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் ஏ.பி.எல்.சுந்தரம், விழா கமிட்டித் தலைவர் ஆர்.ஜெயராமன், செயலாளர் கே.உலகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 11 பதிப்பகங்கள் பங்கேற்ற இக்கண்காட்சியில் ஆன்மிகம், அரசியல், புதினங்கள், கட்டுரை, இலக்கியம் உள்பட 25,000-க்கும் அதிகமான நூல்கள் இடம்பெற்றுள்ளன. நூல்கள் அனைத்தும் 10 சதவீதத் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இக்கண்காட்சி, செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) வரை நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments