சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி
ஆம்பூர் ரோட்டரி சங்கம், ஆனைக்கார் ரபீக் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் ரோட்டரி சங்கம், ஆனைக்கார் ரபீக் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் ரோட்டரி சங்கத் தலைவர் ரவிக்குமார் தலைமையில் ஆம்பூர் ஏ-கஸ்பா அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து பேரணி தொடங்கியது. முக்கியச் சாலை வழியாகச் சென்ற ஊர்வலம் பள்ளியில் நிறைவடைந்தது. பள்ளிச் செயலாளர் சி.குணசேகரன், தலைமை ஆசிரியர் குமரகுருபாரதி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும், வாகனங்களின் முகப்பு விளக்குகளுக்கு கருப்பு வில்லை ஒட்டப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.