ஆம்பூர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம்
அண்மையில் வெளியான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான வாரியத் தேர்வு முடிவில் ஆம்பூர் கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
அண்மையில் வெளியான பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான வாரியத் தேர்வு முடிவில் ஆம்பூர் கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
தமிழ்நாடு தொழில்நுட்ப இயக்ககத்தின் சார்பில் நடைபெற்ற வாரியத் தேர்வில் ஆம்பூர் கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரியின் 3-ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த மாணவர் டி. தப்ரேஸ் அஹமத் 700-க்கு 686 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 3-ஆம் ஆண்டு எலக்டிரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் துறையைச் சேர்ந்த எம். ஜகன்னாதன் 686 மதிப்பெண்களும், 3-ஆம் ஆண்டு எலக்டிரிக்கல் துறையைச் சேர்ந்த மாணவி இ. செல்வி 683 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்த மாணவர்களை கல்லூரியின் தலைவர் கே. அமினூர் ரஹ்மான், கல்லூரியின் செயலரும், தாளாளருமான கே.ஷாஹித் மன்சூர், முதல்வர் த. ராஜமன்னன், நிர்வாக அலுவலர் ஹிரானி சாஹிப், துணை முதல்வர் ஏ. முஹம்மத் ஷாஹின்ஷா, துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.