FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு

குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து இரண்டரை சவரன் தங்க நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

Updated On : 8 ஜூன் 2018, 12:43 am IST
பகிர்:

குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து இரண்டரை சவரன் தங்க நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
குடியாத்தம் கஸ்பா, சக்தி நகரைச் சேர்ந்தவர் செல்லையா. தனியார் நிறுவன ஊழியரான இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தாராம். வியாழக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே அறையில் இருந்த இரண்டரை சவரன் தங்க நகைகள், ரூ. 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குடியாத்தம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments