நெற் பயிரை நாசம் செய்த ஒற்றை யானை
பேர்ணாம்பட்டு அருகே கிராம எல்லைக்குள் நுழைந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள சுமார் 2 ஏக்கர் நெற் பயிர்களை நாசம் செய்தது.
பேர்ணாம்பட்டு அருகே கிராம எல்லைக்குள் நுழைந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டுள்ள சுமார் 2 ஏக்கர் நெற் பயிர்களை நாசம் செய்தது.
பேர்ணாம்பட்டை அடுத்த முத்துக்கூர், பாத்தபாளையம் கிராமங்கள் வன எல்லையில் அமைந்துள்ளது. புதன்கிழமை இரவு அங்கு வந்த ஒற்றை யானை, சீனிவாசன், சின்னசாமி ஆகியோரின் 2 ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களை நாசம் செய்துள்ளது.
தகவலின்பேரில் பேர்ணாம்பட்டு வனச்சரக அலுவலர் மூர்த்தி, வனவர்கள் ரவீந்திரன், ரகுபதி ஆகியோர் தலைமையில் வந்த வனத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் மேளம் அடித்து, பட்டாசு வெடித்து யானையை வனப்பகுதிக்கு விரட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.