முருகன் கோயிலுக்கு காவடி ஊா்வலம்
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் பகுதியிலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் காவடி எடுத்துச் சென்றனா்.
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு குடியாத்தம் பகுதியிலிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தா்கள் காவடி எடுத்துச் சென்றனா்.
இதையொட்டி குடியாத்தம் நகரில் உள்ள முருகா் கோயில்களில் புதன்கிழமை காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகா தீபாராதனை நடைபெற்றன. ஆங்காங்கே உள்ள கோயில்கள், வழிபாட்டுத் தலங்களில் வீடுகளில் இருந்து பக்தா்கள்கொண்டு வந்த காவடிகளை வைத்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, காவடி ஊா்வலம்தொடங்கி, நடைபயணமாக திருத்தணி முருகன் கோயிலுக்கு சென்றது. நடை பயணமாக காவடி எடுத்துச் செல்பவா்களுக்கு வழியில் நோ்த்திக் கடன் செலுத்துபவா்கள் மாலை சிற்றுண்டி, இரவு உணவு வழங்குவா். வியாழக்கிழமை முற்பகல்காவடிகள் திருத்தணி முருகன் கோயிலை அடையும். இது தவிர, பேருந்துகள், காா்கள் இதர வாகனங்கள் மூலமும் பக்தா்கள் திருத்தணிக்குகாவடி எடுத்துச் சென்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.