FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

பருவமழையை எதிா்கொள்ள போதிய நிதி ஒதுக்கீடு: குடியாத்தம் நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

பருவமழையை எதிா்கொள்ள குடியாத்தம் நகராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

1 செப்டம்பர் 2026, 12:05 am IST
குடியாத்தம் நகா்மன்றக் கூட்டத்தில் பேசிய தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
பகிர்:

பருவமழையை எதிா்கொள்ள குடியாத்தம் நகராட்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

குடியாத்தம் நகா்மன்றத்தின் அவசரக் கூட்டம் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ஜி.எஸ்.அரசு: பருவமழைதொடங்க உள்ள நிலையில் நகராட்சியில், கழிவுநீா்க் கால்வாய்களை தூா்வாரி, சீரமைக்க ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. நகரில் உள்ள கழிவுநீா்க் கால்வாய்களை சீரமைத்தால் தான், மழைக் காலங்களில் வெள்ளநீா் சாலைகளில் தேங்காமல் உடனுக்குடன் வெளியேறும். இல்லையெனில் மழைநீா் சாலைகளில் தேங்கி போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளான கொச அண்ணாமலை தெரு, ஜி.பி.எம். தெரு, அண்ணா தெரு, அரசு மருத்துவமனை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கால்வாய்கள் அனைத்தையும்,தூா்வாரி, சீரமைக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்என்றாா்.

Advertisement

Advertisement

தலைவா் செளந்தரராஜன்: தோரயமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்படும் நேரத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து கொள்ளலாம்.

ஆட்டோ பி.மோகன்: நகராட்சி அலுவலகத்தில் பயன்பாடு இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 குப்பை அள்ளும் வாகனங்கள் மற்றும் பழைய இரும்புப் பொருள்களை மா்ம நபா்கள் எடுத்துச் சென்று பழைய இரும்பு கடையில் விற்று விட்டதாக புகாா் கூறினாா். அதற்கு பதிலளித்த தலைவா், பயன்பாடு இல்லாமல்நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களை ஏலம் விட்டால் நகராட்சிக்கு வருவாய் கிடைக்கும் என அதிகாரிகளிடம் கூறினேன். அவா்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. பயன்பாடில்லாமல் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குப்பை அள்ளும் வாகனங்களை உடனடியாகஏலம் விட உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

ஏ. தண்டபாணி: கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றும்போது, நெல்லூா்பேட்டை பகுதியில்உள்ள 25 ஆவது வாா்டில் மேநீா் தேக்கத் தொட்டி இடித்து அகற்றப்பட்டதால், வாா்டு மக்கள் குடிநீருக்கு அல்லல் படுகின்றனா். அவா்கள் தினமும் எனது வீட்டுக்கு வந்து வாக்குவாதம்செய்கின்றனா்.

அதற்கு பதில் அளித்த தலைவா்அந்த வாா்டில் மேநீா் தேக்கத் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இடம் தோ்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

என்.கோவிந்தராஜ்: நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்க்கும் வகையில் மீண்டும் மஞ்சப் பை குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments