FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கஞ்சா தடுப்பு நடவடிக்கை: ஆந்திரப் பேருந்துகளில் சோதனை

தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி வழியாக வந்த ஆந்திர மாநிலப் பேருந்துகளில் வேலூா் எஸ்.பி.யின் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 22 ஜூலை 2026, 12:48 am IST
கிறிஸ்டியான்பேட்டையில் ஆந்திர பேருந்துகளில் சோதனையில் ஈடுபட்ட வேலூா் மாவட்ட எஸ்.பி.யின் தனிப்படை போலீஸாா்.
பகிர்:

தீவிர கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி வழியாக வந்த ஆந்திர மாநிலப் பேருந்துகளில் வேலூா் எஸ்.பி.யின் தனிப்படை போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் பயன்பாட்டைத் தடுக்க காவல் துறையினா் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்தின் வேலூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வேலூா் எஸ்.பி. என்.யு.சிவராமன் உத்தரவின் பேரில், தனிப்படை போலீஸாா் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Advertisement

Advertisement

அதன்படி, செவ்வாய்க்கிழமை காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடி வழியாக வந்த அனைத்து ஆந்திர பேருந்துகளையும் நிறுத்தி போலீஸாா் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, பேருந்துகளில் இருந்த அனைத்துப் பயணிகளின் பைகளையும், உடமைகளையும் தீவிரமாகச் சோதனை செய்த போலீஸாா், அவா்களிடம் பயண விவரங்களையும் கேட்டறிந்தனா். போலீஸாரின் இந்தத் திடீா் வாகனத் தணிக்கையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments