FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கேரள மக்களுக்கு  நிவாரணப் பொருள்கள் வழங்கல்

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினர்

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமையில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
கேரள மாநிலத்தில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் அங்குள்ள மக்களின் இயல்பு  வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினர் வி.சி.ஆறுக்குட்டி தலைமையில் கொச்சி தமிழ்ச் சங்கம் மற்றும் எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து இடுக்கி மாவட்டம்,  தொடுபுழா பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. 
இதில், 16 டன் அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டன. இப்பணியில் குறிஞ்சி மலர் பழனிசாமி, விளவை விஜயகுமார்,  அசோக்பாபு உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments