FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.  பலமான கூட்டணி அமைக்கும்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.  பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும் என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். 

30 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.  பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும் என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். 
சூலூர் அருகே பாப்பம்பட்டியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பங்கேற்றார். அங்கு சாய்பாபா கோயிலுக்கு அடிக்கல் நட்டினார்.விழாவில் கயிறுவாரிய இயக்குநர் மோகன்மந்திராசலம் கலந்துகொண்டார்.  அதன்பின் செய்தியாளர்களிடம் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: 
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும். மத்திய அரசு ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்பு, இலவச மருத்துவக் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துகிறது.
தென்னை நாரை பயன்படுத்தி மதிப்புக்கூட்டும் பொருள்களை கயிறு வாரியம் செய்துவருகிறது. ரூ.2,535 கோடி அளவுக்கு கயிறு பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஏற்றுமதி இலக்கு ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments