விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பாராட்டு
விளையாட்டுப் போட்டிகளில் வெற்ற பெற்ற சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளிமாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்ற பெற்ற சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளிமாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இப்போட்டிகளில் வால்பாறையை அடுத்த சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பல போட்டிகளில் முதல் மூன்று பரிசுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் மு.சிவசரவணன் தலைமையில் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.