ஆயுள் காப்பீட்டு முகவர்கள் ஆர்ப்பாட்டம்
சூலூரில் ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூரில் ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சூலூரில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளையில் 800க்கும் மேற்பட்டோர் முகவர்களாக உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை கோட்டப் பொருளாளர் மாதவன் தலைமையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சூலூர் கிளை முகவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
பாலிசிதாரர்களுக்கு பாலிசியின் மீது வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். பிரீமியத் தொகை மீதும், தாமதக் கட்டணத்தின் மீதும் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூலூர் கிளை முகவர் பொன்னுசாமி நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.