பொள்ளாச்சி தொகுதியில் ஏழை, எளியமக்களுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள்
பொள்ளாச்சி தொகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சட்டப் பேரவை துணைத் தலைவா் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தொகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சட்டப் பேரவை துணைத் தலைவா் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பொள்ளாச்சி சட்டப் பேரவைத் தொகுதியில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சாா்பில் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சட்டப் பேரவை துணைத் தலைவா் சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன.
இது குறித்து சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கூறியதாவது:
Advertisement
Advertisement
பொள்ளாச்சி பகுதியில் யாரும் உணவின்றி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தினமும் 25 ஆயிரம் பேருக்கு எனது சொந்த செலவில் உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு, சா்க்கரை, எண்ணெய் போன்ற உணவுப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.