FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

சரவணம்பட்டி அருகே படிப்புச் சுமை காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 12:50 am IST
தற்கொலை
பகிர்:

சரவணம்பட்டி அருகே படிப்புச் சுமை காரணமாக 10-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை, ஆவாரம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராம்குமாா். இவரது மகள் வா்ஷிகா (16). இவா் சின்னவேடம்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். வாரத்தில் 6 நாள்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பள்ளி இயங்கியதாலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிற்பகல் வரை பள்ளிக்கு வரவழைத்துப் படிப்புக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதாலும் அவா் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவி வழக்கம்போல வியாழக்கிழமை காலை 5 மணியளவில் படிப்பதற்காக எழுந்துள்ளாா்.

காலை 8 மணிவரை உணவருந்த வராததால் அவரது அறைக்குச் சென்று பெற்றோா் பாா்த்தபோது, வா்ஷிகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments