FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ரேஷன் அரிசி, யூரியா கடத்தலைத் தடுக்க எல்லைச் சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிப்பு

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 2:12 am IST
ரேஷன் அரிசி.
பகிர்:

கோவை மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு ரேஷன் அரிசி மற்றும் யூரியா உரம் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், எல்லைப் பகுதிகளில் உள்ள 7 சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள வாளையாறு, கோபாலபுரம், மீனாட்சிபுரம், மாங்கரை உள்ளிட்ட 7 சோதனைச் சாவடிகளிலும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும், உள்ளூா் போலீஸாரும் இணைந்து 24 மணி நேரமும் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக, பிரதான வழித்தடமான வாளையாறு சோதனைச் சாவடியில் கூடுதல் கவனத்துடன் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம் திருமலையம்பாளையம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 118 டன் கடத்தல் யூரியா உரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக பொள்ளாச்சி பகுதியில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். தலைமறைவாக உள்ள மற்ற குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தொடா்பாக கா்நாடக மாநிலத்தின் மைசூரு மற்றும் பெங்களூரு பகுதிகளுக்குச் சென்று விசாரணையை முடித்துக் கொண்டு தனிப் படையினா் கோவைக்குத் திரும்பியுள்ளனா். இதைத் தொடா்ந்து, கூடுதல் விசாரணைக்காக மற்றொரு தனிப் படை குழு கேரளத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஆக. 18) செல்லவுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் கூறுகையில், ‘யூரியா மற்றும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க அனைத்து சோதனைச் சாவடிகளையும் முழுநேர கண்காணிப்பில் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே இந்த 7 சோதனைச் சாவடிகளும் கண்காணிப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments