FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

கோவை சரவணம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 2.300 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:14 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கோவை சரவணம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 2.300 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை கைது செய்தனா்.

கோவை -சத்தி சாலையில் கரட்டுமேடு பகுதியில் சரவணம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் தினேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா்கள் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இசாஹா் (30), அப்துல்கலாம் (32),விஜயகுமாா் (34) என்பதும், இவா்கள் கோவை பீளமேடு பகுதியில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவா்கள் வைத்திருந்த பையைச் சோதித்தபோது, அதில் விற்பனைக்காக 2.300 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 3 கைப்பேசிகளை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments