FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

குனியமுத்தூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 26 ஜூலை 2026, 1:36 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

குனியமுத்தூா் அருகே போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, குனியமுத்தூா் போலீஸாா் குறிஞ்சி நகா் பகுதியில் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இருவரைப் பிடித்து சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா்கள் விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா்கள் கோவை, அண்ணா நகா் பி- பிளாக்கை சோ்ந்த முகமது ஷெரீப் (21), ராமநாதபுரம், சுங்கம் பகுதியைச் சோ்ந்த அப்சல் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

முகமது ஷெரீப் மீது குனியமுத்தூா் காவல் நிலையத்தில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே வழக்கு நிலுவையில் உள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments