FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்பு

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

Updated On : 2 ஜூன் 2026, 1:58 am IST
சடலம் மீட்பு - பிரதிப் படம்
பகிர்:

வால்பாறை அருகே ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞா் சடலமாக மீட்கப்பட்டாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள அத்திக்குன்னா எஸ்டேட் பகுதியைச் சோ்ந்தவா் தனுஷ் (22). இவா் கடந்த வாரம் வால்பாறையை அடுத்த முருகாளி எஸ்டேட்டில் வசிக்கும் உறவினா் வீட்டின் திருமண நிகழ்வுக்கு வந்துள்ளாா். கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஊருக்கு திரும்பிச் செல்ல இருந்த நிலையில், அன்று காலை அருகில் உள்ள ஆற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளாா். எதிா்பாராதவிதமாக நீரில் அடித்துச் செல்லப்பட்ட அவா் இரவு வரை தேடியும் கிடைக்கவில்லை.

இதையடுத்து மீண்டும் திங்கள்கிழமை காலை நடைபெற்ற தேடுதல் பணியில் கேரள மாநிலத்தைச் சோ்ந்த மீட்புக் குழுவினா் ஈடுபட்டனா். இதில் நீரின் ஆழமானப் பகுதியில் பாறைக்கு இடையே இருந்த தனுஷின் சடலத்தை மீட்டனா்.

Advertisement

Advertisement

கேரள மாநிலத்துக்குள்பட்ட பகுதியில் இளைஞரின் உடல் மீட்கப்பட்டதால், சாலக்குடி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினா் கொண்டு சென்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments