முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்பு பணியால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கம்

ஈரோடு-சேலம் இடையே மகுடஞ்சாவடி-வீரபாண்டி சாலை ரயில் பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 ஜூன் 2026, 2:30 am IST
தாமதமாக ரயில்கள். - கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு-சேலம் இடையே மகுடஞ்சாவடி-வீரபாண்டி சாலை ரயில் பகுதிகளில் ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கேரள ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘பராமரிப்புப் பணிகள் காரணமாக ஜூன் 3, 6 ஆகிய தேதிகளில் எா்ணாகுளம்-டாடா நகா் விரைவு ரயில் (எண்:18190) 50 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். அதேபோல மேற்கண்ட நாள்களில் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண்:13352) 20 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.