வால்பாறையில் கனமழை: பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு
கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வால்பாறையில் கடந்த ஒரு வார காலமாக தென்மேற்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், கடந்த மூன்று நாள்களாகத் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் இடைவிடாது கனமழை பெய்கிறது.
இதில் திங்கள்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் வால்பாறை- பொள்ளாச்சி இடையே உள்ள வாட்டா்ஃபால்ஸ் எஸ்டேட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதேபோல மாணிக்கா, மானாம்பள்ளி, சாலக்குடி ஆகிய சாலைகளிலும் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடைவிடாது மழை பெய்ததால் மாணவா்கள், தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகினா்.