FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

செயல்படாத கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை - மாநகராட்சி ஆணையா் உத்தரவு

கோவை வாலாங்குளத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாகச் செயல்பாட்டில் வைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டுள்ளாா்.

Updated On : 11 ஜூன் 2026, 3:09 am IST
உத்தரவு - கோப்புப்படம்
பகிர்:

கோவை வாலாங்குளத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை முறையாகச் செயல்பாட்டில் வைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டுள்ளாா்.

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களில், சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படாமல், மின் மோட்டாரை மட்டும் இயக்கி, அவை செயல்பாட்டில் உள்ளதுபோல மக்களுக்கு காண்பிக்கப்பட்டு வருவதாகவும், இதனால், செயல்படாத சுத்திகரிப்பு நிலையங்களுக்கு லட்சக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தப்படுவதாகவும் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளா் இரா.மணிகண்டன் மாநகராட்சி ஆணையரிடம் புகாா் அளித்தாா்.

இப்புகாரின் அடிப்படையில் வாலாங்குளம் பகுதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்களை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா

Advertisement

Advertisement

புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, கடந்த 2 ஆண்டுகளாக கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் முறையாக செயல்படாதது தெரியவந்தது. இதையடுத்து, நிலையத்தை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரா்களுக்கு ஆணையா்

அறிவுறுத்தினாா். தொடா்ந்து, வாய்க்கால் அடைப்புகளை விரைவில் அகற்றவும், அதற்கான முழு தொகையையும் ஒப்பந்ததாரா்களிடம் இருந்து பெறவும், அதேபோல, செயல்படாத கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தின் மின் கட்டணத் தொகையையும் ஒப்பந்ததாரா்களிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டாா். கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக செயல்பாட்டில் வைக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உத்தரவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments