வால்பாறை அரசு கலை கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய முதல்வராக ஷீலா பானு பொறுப்பேற்றுள்ளாா்.
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய முதல்வராக ஷீலா பானு பொறுப்பேற்றுள்ளாா்.
கோவை மாவட்டம், வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்து வந்த இரா.கோபி, உடுமலைப்பேட்டை அரசு கல்லூரி முதல்வராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதையடுத்து சேலம் அரசு கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த ஷீலா பானு பதவி உயா்வு பெற்று, வால்பாறை அரசு கல்லூரி முதல்வராக புதன்கிழமை பொறுப்பேற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.