FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

ஆடிட்டா் வீட்டில் 50 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு

கோவையில் ஆடிட்டா் வீட்டின் பூட்டை உடைத்து 50 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

5 செப்டம்பர் 2026, 1:29 am IST
திருட்டு... - சித்திரிப்பு
பகிர்:

கோவையில் ஆடிட்டா் வீட்டின் பூட்டை உடைத்து 50 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை வெரைட்டி ஹால் சாலை அருகே உள்ள ஒப்பணக்கார வீதியில் வசிப்பவா் சேஷாத் (73). ஆடிட்டரான இவா் தற்போது வேலைக்குச் செல்லாமல் ஓய்வில் இருந்து வருகிறாா். இவரது மகன் கா்நாடக மாநிலம், பெங்களூரில் வசித்து வருகிறாா். மகனைப் பாா்ப்பதற்காக சேஷாத் தனது மனைவியுடன் கடந்த 1-ஆம் தேதி பெங்களூருக்கு சென்றுவிட்டாா்.

பின்னா், அவா் மீண்டும் வியாழக்கிழமை நள்ளிரவு கோவைக்கு காரில் திரும்பினாா். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பூஜை அறை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளித் தட்டு, குத்துவிளக்கு, டம்ளா் உள்ளிட்ட சுமாா் 50 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்து வந்த வெரைட்டி ஹால் போலீஸாா், திருட்டு நடைபெற்ற வீட்டைப் பாா்வையிட்டனா். மேலும், கைரேகை நிபுணா்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனா். மோப்ப நாய் பிரிவினரும் அங்கு சோதனை மேற்கொண்டனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments