மர்ம நோயால் கால்நடைகள் இறந்த சம்பவம்: நடவடிக்கை எடுக்க தமாகா கோரிக்கை
மர்ம நோயால் கால்நடைகள் இறந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்தியுள்ளது.
மர்ம நோயால் கால்நடைகள் இறந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகரிடம், ஈரோடு மத்திய மாவட்ட தமாகா தலைவர் பி.விஜயகுமார் தலைமையிலான நிர்வாகிகள் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு வட்டத்துக்குள்பட்ட எலவமலை பகுதிகளில் கடந்த சில நாள்களாக 50-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து வருகின்றன. ஆடுகள், கறவை மாடுகள் மற்றும் எருமைகள் நோய் தாக்குதல் ஏற்பட்ட ஒரு சில நாள்களிலேயே இறந்து விடுகின்றன.
Advertisement
Advertisement
நோயால் பாதிக்கப்படும் கால்நடைகளின் வாயில் இருந்து நீர் வடிதல், தொண்டை கட்டுதல் அறிகுறிகள் தென்படுகின்றன. ஆகாரங்கள் எதுவும் சாப்பிடுவதில்லை. கால்நடை மருத்துவர்கள் ஊசி போட்டாலும் அவை குணமாவதில்லை. உடனடியாக இறந்து விடுகின்றன.
இதனால், ஏழை விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நோய் பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.