FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சத்தியில் லாரிக்கு தீ வைப்பு: போலீஸார் விசாரணை

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை அதிகாலை லாரிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

சத்தியமங்கலத்தில் புதன்கிழமை அதிகாலை லாரிக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்ததைத் தொடர்ந்து சத்தியமங்கலம் பகுதிகளில் அரசு, தனியார் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. போலீஸார் ஆங்காங்கே ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சத்தி, கோவை நெடுஞ்சாலையில் உள்ள எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதியில் லாரி புதன்கிழமை நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மர்ம நபர்கள் சிலர் அதற்கு தீ வைத்துள்ளனர். தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இதைக் கண்ட அவ்வழியே சென்ற மற்ற வாகன ஓட்டிகள் உடனடியாக சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து மேற்கு மண்டல டி.ஐ.ஜி. விஸ்வநாதன், ஈரோடு மாவட்ட எஸ்.பி. சக்திகணேஷ்  ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments