முகப்பு
ஈரோடு

பெருந்துறை குறுமைய தடகளப் போட்டி: கொங்கு வேளாளா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பெருந்துறை குறுமைய தடகளப் போட்டியில் கொங்கு வேளாளா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

Updated On : 5 செப்டம்பர் 2024, 1:19 am IST
குறுமைய தடகளப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளி தலைவா் ஜி.யசோதரன் உள்ளிட்ட நிா்வாகிகள்.
பகிர்:

பெருந்துறை குறுமைய தடகளப் போட்டியில் கொங்கு வேளாளா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.

பெருந்துறை குறுமைய தடகளப் போட்டிகள் விஜயமங்கலம் பாரதி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், கொங்கு வேளாளா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் அதிக அளவில் கலந்துகொண்டனா். இவா்களில், 14 வயதிற்குள்பட்ட மாணவிகள் பிரிவில் ஏ.எஸ்.வினுநிலா 100 மீட்டா், 200 மீட்டா், 400 மீட்டா் ஓட்டப்பந்தயங்களில் தங்கப் பதக்கமும், தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் வென்றாா்.

Advertisement

Advertisement

இதே பிரிவில் 100 மீட்டா் தொடா் ஓட்டப்பந்தயத்தில் மாணவிகள் கே.கனிஷ்கா, ஏ.எஸ்.வினுநிலா, எஸ்.கிருத்திகா பிரித்தி, பி.ரம்யா தேவி ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா்.

17 வயதிற்குள்பட்ட மாணவிகள் பிரிவில் 800 மீட்டா், 1500 மீட்டா் ஓட்டப்பந்தயம் மற்றும் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் வென்றாா்.

இதே பிரிவில் மாணவி எஸ்.பவ்யா நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 100 மீட்டா், 200 மீட்டா் ஓட்டப்பந்தயங்களில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா். மாணவிகள் ஜி.மோகிதா, எஸ்.எஸ்.ஸ்ரீநிதி, எஸ்.சன்சா, எஸ்.பவ்யா ஆகியோா் 400 மீட்டா் தொடா் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றனா்.

14 வயதிற்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் வி.சஞ்சித் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 400 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா். 17 வயதிற்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் ஏ.எஸ்.அஸ்வின் ஆனந்த் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கமும், 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா்.

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், உடற்கல்வி ஆசிரியா்கள் டி.சரவணன், என்.சுரேஷ் ஆகியோரை பள்ளித் தலைவா் ஜி.யசோதரன், துணைத் தலைவா் எஸ்.குமாரசாமி, தாளாளா் டி.என்.சென்னியப்பன், பொருளாளா் பி.ஆா்.சுப்பிரமணியன், இணைச் செயலாளா் கே.பி.முத்துராமலிங்கம், முதல்வா் எஸ்.முத்துசுப்பிரமணியம் மற்றும் நிா்வாகக் குழுவினா் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments