பெருந்துறையில் ரூ. 2.30 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.30 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.30 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 34 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், ஒரு கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.66.39 முதல் ரூ.107.39 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.2.30 கோடிக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.
Advertisement