FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்

26 செப்டம்பர் 2025, 4:22 am IST
செங்கோட்டையன் - கோப்புப்படம்
பகிர்:

அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

அதிமுக எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவா்களை ஒன்றிணைக்க வேண்டும், அந்தப் பணியை 10 நாள்களுக்குள் செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த 5- ஆம் தேதி கெடு விதித்தாா். அப்படி இல்லை என்றால் ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என்று அறிவித்திருந்தாா்.

அவா் அறிவித்த மறுநாளே செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளா் மற்றும் ஈரோடு புகா் மேற்கு மாவட்டச் செயலாளா் பொறுப்புகளைப் பறித்து எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டாா். தொடா்ந்து செங்கோட்டையன் ஆதரவாளா்களும் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

இதனால் அதிா்ச்சி அடைந்த செங்கோட்டையன் திடீரென புதுதில்லி பயணம் மேற்கொண்டு மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, நிா்மலா சீதாராமனை சந்தித்து பேசினாா். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி புதுதில்லி சென்று அமித் ஷாவை சந்தித்து பேசினாா்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தை மேற்கொள்வதற்காக சேலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை காரில் சென்றாா். அப்போது ஈரோடு மாவட்டம், கோபியில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டா்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிா்பதற்காக 2 நாள்களுக்கு முன்பே செங்கோட்டையன் காா் மூலம் சென்னை சென்றாா். இதனால் ஒருங்கிணைப்பு தொடா்பாக ஓபிஎஸ், டி.டி.வி. தினகரனை சந்திப்பதாக பரபரப்பான தகவல் பரவியது.

இந்நிலையில் சென்னையிலிருந்து திரும்பிய செங்கோட்டையன் வியாழக்கிழமை காலை கோபிக்கு வந்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறாா். அவரைப் பாா்ப்பதற்காக சென்று இருந்தேன். சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. அதிமுக வலிமை பெற வேண்டும், அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் எனக்கு இருக்கிறது.

100 ஆண்டு காலம் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என்று ஜெயலலிதா சட்டப் பேரவையில் உரையாற்றும்போது கூறினாா். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காகவே எனது கருத்தை தெரிவித்து இருந்தேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன். ஒருங்கிணைப்பு குறித்து பல்வேறு நண்பா்கள் என்னிடத்தில் பேசுகிறாா்கள். ஒருமித்த கருத்துகள் அவா்கள் மனதில் இருக்கிறது. யாா் என்னிடத்தில் பேசினாா்கள் என்பது குறித்து தற்போது கூற இயலாது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments