விசிலுக்குப் பதில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட செங்கோட்டையன்! பிரசாரத்தில் குழப்பம்
“இரட்டை இலைக்கு வாக்கு கேட்டே பழகிவிட்டது” - பிரசாரத்தில் செங்கோட்டையன்
Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:38 PM
ஈரோடு : இரட்டை இலைக்கு வாக்கு கேட்டே பழகிவிட்டது என்று தவெக வேட்பாளர் செங்கோட்டையன் தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் தாம் புதிதாகச் சேர்ந்துள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் கே. ஏ. செங்கோட்டையன் ஈடுபட்டார். அப்போது பிரசார வாகனத்தில் நின்றபடி பேசிய அவர், தவெகவுக்கு தேர்தல் ஆணையத்தால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட ஒதுக்கப்பட்டுள்ள விசில் சின்னத்துக்குப் பதிலாக இரட்டை இலை என்று குறிப்பிட்டு சலசலப்பை ஏற்படுத்தினார்.
உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர், இரட்டை இலை என்றே வாக்கு கேட்டுக்கேட்டுப் பழகிவிட்டதாகப் பேசி சமாளித்தார். இதனால் பிரசாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
Advertisement
summary