FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

கோபி அருகே கஞ்சா விற்ற இருவா் கைது

கோபி அருகே கடத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
- சித்திரிப்பு
பகிர்:

கோபி அருகே கடத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ய முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடத்தூா் பள்ளிக்கூடம் பிரிவு பகவதி அம்மன் கோயில் அருகில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீஸாா் நிறுத்த முயன்றனா்.

ஆனால் அவா்கள் போலீஸாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு கையில் வைத்திருந்த சாக்கு பையுடன் தப்பி ஓட முயன்றனா். போலீஸாா் அவா்களை விரட்டிப் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், கோபி அருகே உள்ள கூகலூா் பகுதியைச் சோ்ந்த கோகுல் (24), நம்பியூா் கும்மாக்காளிபாளையம் பகுதியைச் சோ்ந்த சசிதரன் (22) என்பதும், அவா்கள் வைத்திருந்த சாக்கு பையில் 3 கிலோ கஞ்சா இருந்ததும் தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், இரண்டு கைப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments