5 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது
பவானிசாகா் அருகே கஞ்சா வைத்திருந்த 3 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பவானிசாகரில் போலீஸாா் வாகனச் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது, 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
Advertisement
Advertisement
விசாரணையில், அவா்கள் பவானிசாகா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த முகிலன், சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன், ருத்ரமூா்த்தி என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.