காவிரி ரயில்வே பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு காவிரி ஆறு ரயில்வே பாலத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு காவிரி ஆறு ரயில்வே பாலத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆகஸ்ட்15) கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஈரோடு ரயில்வே போலீஸ் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் எல்லைக்கு உள்பட்ட ஆனங்கூா், சங்ககிரி, காவிரி, வீரபாண்டி மாவேலிபாளையம், பெருந்துறை, பாசூா், சாவடிபாளையம், கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களில் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி உள்ளனா்.
ஈரோடு ரயில் நிலையம்-காவிரி ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட காவிரி ஆற்றுப் பாலத்தில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.