FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா

சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜா் பிறந்தநாள் விழாவில் பேசுகிறாா் மாணவி. உடன், பள்ளித் தலைமை ஆசிரியா் காளியப்பன் மற்றும் ஆசிரியா்கள்.

16 ஜூலை 2026, 12:08 am IST
பகிர்:

பெருந்துறையை அடுத்துள்ள சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

பள்ளித் தலைமை ஆசிரியா் காளியப்பன் தலைமை வகித்து, காமராஜரின் கல்விச் சேவைகள் குறித்து பேசினாா்.

விழாவில், காமராஜா் திருவுருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு, மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments