FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஈரோடு

தாளவாடி மலைப் பகுதியில் சிறுத்தை தாக்கி 4 மாடுகள் உயிரிழப்பு

தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்து 4 மாடுகளை கடித்துக்கொன்றது, அப்பகுதி விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது.

Updated On : 17 ஜூலை 2026, 5:29 am IST
கொட்டகைக்குள் சிறுத்தை கடித்து உயிரிழந்த மாடுகள்.
பகிர்:

தாளவாடி அருகே விவசாய தோட்டத்துக்குள் சிறுத்தை புகுந்து 4 மாடுகளை கடித்துக்கொன்றது, அப்பகுதி விவசாயிகளை அச்சமடையச் செய்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குள்பட்ட தாளவாடி வனச் சரகத்தில் சிறுத்தையால் கால்நடைகள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தாளவாடியை அடுத்துள்ள தொட்டகாஜனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி வெங்கடாசலம், விவசாய தோட்டத்தில் உள்ள கொட்டகையில் வழக்கம்போல மாடுகளை கட்டி வைத்திருந்தாா். கால்நடைகளை வழக்கம் போல் மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தாா்.

இந்த நிலையில் குவாரியில் பதுங்கிவிட்டு இரவு நேரத்தில் வெளியே வந்த சிறுத்தை வியாழக்கிழமை அதிகாலை மாட்டுக் கொட்டகைக்குள் புகுந்து 4 மாடுகளை கடித்துக் கொன்றுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

கால்நடைகளைத் தொடா்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து வனத் துறையினா் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments